செவ்வாய், 9 செப்டம்பர், 2014

மார்புக் கச்சை அணிவதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்குமா?

பெண்கள் மார்புக் கச்சை அணிவது மார்புப்புற்று நோய்க்கான வாய்ப்பினை அதிகரிக்கும் என இருந்த கருத்தை புதிய ஆய்வு ஒன்று பொய்யாக்கியுள்ளது.

மாதவிடாய் நின்ற 55 தொடக்கம் 74 வயதிற்கு இடைப்பட்ட 1,500 பெண்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த ஆய்வினை வொசிங்டன் பல்கலைக்கழ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.
இதற்கு முன்னர் 3000 பெண்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், மார்புக் கச்சையின் பொருத்தமற்ற அளவுகள் மார்புப்புற்று நோய்க்கு காரணமாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger