வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

சாரதி இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ கார் தயாரிக்கப்படுகிறது


தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக கூகுள் நிறுவனம் திகழ்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் உருவாக்கியது.


அதை பொடோட்டா பிரையஸ் மற்றும் எலக்சல் ஆர்எக்ஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது. இருந்தாலும் கார் உற்பத்தி தொழில் நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத முன்னணி நிறுவனங்கள் அதனுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.

எனவே, தாமாகவே கார் உற்பத்தி செய்ய கூகுள் முடிவு செய்துள்ளது. அதன் படி சாரதியே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இவை சாரதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் வழங்குகிறது.

இக்கார்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஒட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார்களால் வீதி விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger