வியாழன், 30 மே, 2013
பிள்ளைகளின் இணைய பயன்பாடு பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
சிறுவர்கள் இணையத்தில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் அவசியம். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இணையம் உதவினாலும் தவறான வழிக்கும் இட்டுச் செல்லும்.
உங்கள் பிள்ளைகள் இணையத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கவனிக்க இதோ சில வழிகள்:
குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது :
இன்றைய சூழலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை. இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது :
பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு நடுவே குழந்தைகளோடு நேரத்தை ஒதுக்குவது அரிதாவிட்டது. ஆயினும், குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். இதன்மூலம் அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த உதவும்.
கம்ப்யூட்டரை பொதுவான இடத்தில் வைப்பது :
கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.
கம்ப்யூட்டரில் செலவிடும் நேரத்தை விதிப்பது :
இவ்வளவு நேரம் தான் கணினியில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் தாம் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க `பாஸ்வேர்ட்' உதவும்.
இணைய உபயோகத்தை கண்காணிப்பது :
வீட்டில் இணையத்திற்குத் தடை விதித்தால் குழந்தைகள் `சைபர் கஃபே'களுக்குச் செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் பிள்ளைகளைத் தடுப்பதை விட கண்காணிப்பதே சிறந்த வழி.
குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அளவுக்கு அதிகமான கண்டிப்பும் தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நண்பர்களுடன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.
உங்கள் அனைவருக்கும்
உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக